தமிழகத்தில் 5 ஆயிரம் ஏக்கர் பஞ்சமி நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணைத்தலைவர் முருகன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சென்னையில் அவர் அளித்த பேட்டியில் மேலும், ‘பஞ்சமி நிலத்தை ஆக்கிரமித்துள்ள 1000 பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. பஞ்சமி நிலத்தை யார் ஆக்கிரமித்திருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் 12 லட்சம் ஏக்கர் நிலங்கள் வழங்கப்பட்ட நிலையில் 1.80 லட்சம் ஏக்கர் பஞ்சமி நிலம் மட்டுமே உள்ளது’ என்று முருகன் கூறியுள்ளார்.
newstm.in