கொடநாடு பங்களாவில் நடைபெற்ற கொலை மற்றும் கொள்ளை சம்பவங்களுக்கு பின்னணியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளதாக வெளியாகி வரும் தகவல்கள் அனைத்தும் தமிழக அரசின் பெயரை கெடுக்க செய்யப்படும் சதி, என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
கொடநாடு கொள்ளை - கொலை சம்பவம் குறித்து தெஹல்ஹா பத்திரிக்கையின் முன்னாள் ஆசிரியரான மேத்யூஸ் ஆவணப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த படத்தில், கைது செய்யப்பட்ட குற்றவாளிகளை நேரடியாக பேட்டி எடுத்துள்ளார். அதில், கொள்ளை சம்பவத்தை திட்டமிட்டது பற்றி அவர்கள் பேசுகின்றனர். முக்கியமாக, கொடநாடு எஸ்டேட்டில் இருந்து பணம்,நகைகள் மற்றும் சில முக்கியமான ஆவணங்களை கொண்டு வந்து கொடுக்குமாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஜெயலலிதாவின் ஓட்டுநர் கனகராஜிடம் கூறியதாக குற்றவாளி சயன் கூறுகிறார்.
மேலும், இந்த சம்பவம் தொடர்பாக 5 பேர் இறந்தது திட்டமிட்டு செய்யப்பட்ட படுகொலை என்றும், கொடநாடு சம்பவத்திலும், ஜெயலலிதாவின் மரணத்தின் பின்னணியிலும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், சசிகலாவும் உள்ளனர் என்றும் அதில் காட்டப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த ஆவணப்படம் குறித்து பேசிய அமைச்சர் ஜெயக்குமார், இது தமிழக அரசின் பெயரை களங்கப்படுத்த சில செய்யும் சதி என தெரிவித்துள்ளார்.
newstm.in