வாக்குச்சாவடிகளில் 6 மணிக்கு பின் எத்தனை பேர் இருந்தாலும் டோக்கன் வழங்கப்படும் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ கூறுகையில், ’தமிழகத்தில் பெரியளவில் சட்டம் ஒழுங்கு பிரச்னை எதுவும் ஏற்படவில்லை. ஒரு சில இடங்களில் மட்டும் வாக்குச்சாவடிகளுக்கு வெளிப்பகுதிகளில் சில பிரச்னைகள் நடந்துள்ளன’என்றார்.
மேலும், 6 மணிக்கு மேல்தான் டோக்கன் வழங்கப்படும்; மதுரையில் இரவு 8 மணிவரை வாக்குப்பதிவு நடைபெறும் என்ற அவர், வாக்குச்சாவடிகளில் 6 மணிக்கு பின் எத்தனை பேர் இருந்தாலும் டோக்கன் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.
newstm.in