அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை முறைப்படி அரசியல் கட்சியாக தேர்தல் ஆணையத்திடம் பதிவு செய்ய டிடிவி தினகரன் திட்டமிட்டுள்ளார்.
அதிமுகவுக்கு உரிமை கோரிய நிலையில், தான் புதிதாக தொடங்கிய அமமுக-வை அரசியல் கட்சியாக தினகரன் பதிவு செய்யவில்லை. இதனால், தேர்தலில் தினகரன் அணி வேட்பாளர்களுக்கு தேர்தல் ஆணையம் தனிச் சின்னம் ஒதுக்க மறுத்தது. பின்னர் நீதிமன்ற தலையீட்டுக்குப் பிறகு அமமுக வேட்பாளர்களுக்கு பரிசுப்பெட்டி சின்னம் வழங்கப்பட்டது. அவர்கள் அனைவரும் சுயேட்சையாக போட்டியிட்டனர்.
இத்தகைய சூழலில், அமமுக-வை கட்சியாக பதிவு செய்வது குறித்து நிர்வாகிகளுடன் தினகரன் ஆலோசித்து வருகிறார்.
newstm.in