தமிழகத்தில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள, நான்கு சட்டசபை தொதகுதிகளில் போட்டியிட விரும்புவோபுவோர், வரும், 21ம் தேதி, கட்சித் தலைமையகத்தில் விருப்பு மனு அளிக்கலாம் என, அதிமுக தலைமை அறிவித்துள்ளது.
திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, சூலுார், ஒட்டப்பிடாரம் ஆகிய நான்கு சட்டசபை தொகுதிகளுக்கு, அடுத்த மாதம், 19ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் இந்த தொகுதிகளில், அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோர், இம்மாதம், 21ம் தேதி கட்சித் தலைமையகத்தில், ரூ.25 ஆயிரம் செலுத்தி விருப்ப மனு பெறலாம் என, கட்சித் தலைமை அறிவித்துள்ளது.
அதே போல், விருப்ப மனுக்களை பூர்த்தி செய்து, அன்று மாலைக்குள் சமர்ப்பிக்க வேண்டும் எனவும், அதிமுக தலைமை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
newstm.in