தமிழகத்தில் பாஜக மிகப்பெரிய பலத்தையும் அங்கீகாரத்தையும் பெறும் என பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்த தமிழிசை சௌந்தரராஜன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, வேலூர் தொகுதி மக்களவை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் ஏ.சி.சண்முகம் வெற்றி பெற வேண்டும் என இறைவனை பிரார்த்திப்பதாக கூறினார்.
தமிழகத்தில் பாஜக மிகப்பெரிய பலத்தையும், அங்கீகாரத்தை பெறும் என தெரிவித்த தமிழிசை, காஷ்மீர் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு சுமூக தீர்வு காண பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றி பெறும் என கூறினார்.
newstm.in