பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக கடிதம் எழுதுபவர்கள் மீது தேசதுரோக வழக்கு பாயத்தான் செய்யும் என்று பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக நெல்லை மாவட்டம் களக்காட்டில் தனியார் சேனலுக்கு அமைச்சர் அளித்த பேட்டியில், ‘ பிரதமர், மத்திய அரசை மிரட்டும் வகையில் கடிதம் எழுதுவோரை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக கடிதம் எழுதுபவர்கள் மீது தேசதுரோக வழக்கு பாயத்தான் செய்யும். திமுக, காங்கிரசுக்கு தேசப்பற்றும், தெய்வீகப்பற்றும் கிடையாது. மத்திய, மாநில அரசுகள் எடுக்கும் நடவடிக்கையால் இந்தியா வல்லரசாக மாறும்’ என்று அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கூறியுள்ளார்.
newstm.in