போர் எந்தவிதத்தில் வந்தாலும் சந்திக்க வேண்டும் என உள்ளாட்சி தேர்தல் குறித்து அமைச்சர் செல்லூர் ராஜூ கருத்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக நெல்லையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், மேயர் பதவிக்கு மறைமுக தேர்தல் என்பதற்கு பாஜக தரப்பில் எதிர்ப்பு தெரிவித்தது குறித்து கேட்டதற்கு, பாஜகவுடன் தேர்தல் நேரத்தில் மட்டுமே கூட்டணி என்றும் பதிலளித்துள்ளார்.
முன்னதாக, மேயர் பதவிக்கு மறைமுக தேர்தல் என்பது குதிரை பேரத்திற்கு வழிவகுக்கும் என்று பாஜகவின் எஸ்.ஆர்.சேகர் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
newstm.in